தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது : நீதிமன்றம் வேதனை


தமிழகத்தில் தமிழில் படிப்பதை ஊக்குவிக்கவே தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை  உயர்நீதிமன்றம்தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறியதாவது:தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டிக் தமிழ் இருக்கும்? என கேள்விகள் எழுப்பினர்.மேலும் தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என கூறி தீர்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.மதுரையை சார்ந்த சக்திராவ் தொடுத்த வழக்கில், இடஒதுக்கீடு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டும் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

Post a Comment

0 Comments